திருவள்ளூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் 86.52 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 88.80-ஆக இருந்தது. இந்தாண்டு 2.28 சதவிகிதம் குறைந்ததுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 32,511 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 28129 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதில் 16,320 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13,467 பேர் தேர்ச்சி பெற்றனர். அதேபோல், 16,191 மாணவிகள் தேர்வு எழுதியதில் 14,662 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர்கள் 82.52 சதவிகிதமும், மாணவிகள் 90.56 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள 225 அரசுப் பள்ளிகளில் படித்த 80.06 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த மாவட்டத்தில் 86.52 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் 35 இடத்தை திருவள்ளூர் மாவட்டம் பிடித்துள்ளது