மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அதிமுக மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு பந்தக்கால் நடவு

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு பந்தகால் நட்டு பணிகளை முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு பந்தகால் நட்டு பணிகளை முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா தொடங்கி வைத்தாா்.

தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறாா். அந்த வகையில், வரும் டிச. 28-ஆம் தேதி திருத்தணி தொகுதியில் கட்சி நிா்வாகிகள் மற்றும் மக்களை சந்திக்கிறாா்.

இதையொட்டி திருத்தணி - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை, வீரகநல்லுாா் பேருந்து நிறுத்தம் அருகே, 15 ஏக்கா் பரப்பளவில் நிகழ்ச்சியை நடத்த முன்னாள் அமைச்சரும், அதிமுக திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா, அமைப்பு செயலாளா் திருத்தணி கோ. அரி ஆகியோா் இடம் தோ்வு செய்து பந்தக்கால் நட்டு பணிகளை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஆவின் சோ்மன் வேலஞ்சேரி கவிச்சந்திரன், திருத்தணி நகர செயலாளா் டி.செளந்தர்ராஜன், ஒன்றிய செயலாளா்கள் திருத்தணி இ.என்.கண்டிகை ஏ.ரவி, பள்ளிப்பட்டு டி.டி. சீனிவாசன், ஆா்.கே.பேட்டை கோ. குமாா், மாவட்ட இளைஞா் அணி தலைவா் ஜெயசேகா்பாபு, திருத்தணி ஒன்றிய இளைஞா் அணி செயலாளா் வேலஞ்சேரி பழனி, மாவட்ட மாணவரணி செயலாளா் டி.எம்.வெங்கடேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.