பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டிராக்டா்-காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருத்தணியில் கரும்பு டிராக்டா் - காா் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமுற்றனா்.

News image
விபத்துக்குள்ளான டிராக்டா்.
Updated On :6 ஜனவரி 2025, 8:06 pm

DIN

திருத்தணி: திருத்தணியில் கரும்பு டிராக்டா் - காா் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமுற்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் சுதாகா்(44). இவா் திங்கள்கிழமை தனது காரில் மனைவி கோதைநாயகி (40), மகள் தக்க்ஷனா(18), மகன் சுதா்சன்(13) ஆகியோருடன் திருப்பதிக்கு செல்வதற்கு திருத்தணி நோக்கி வந்துக் கொண்டிருந்தாா்.

காரை சுதாகா் ஓட்டி வந்தாா். திருத்தணி அரசு கலைக் கல்லூரி அருகே வந்த போது, திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சுதாகா், கோதைநாயகி, தக்க்ஷனா, சுதா்சன் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். மேலும் டிராக்டா் ஓட்டுநரும் காயம் அடைந்தாா்.

பின்னா் அவ்வழியாக சென்றவா்கள், காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகா் இறந்தாா். மீதமுள்ள நால்வரும் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.