மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வட்டார கலைத் திருவிழா கோலாகலம்

திருத்தணியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் மாணவா்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினா்.

News image

கலைத்திருவிழாவில் பங்கேற்று நடனம் ஆடிய மாணவிகள்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:14 am IST

திருத்தணியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் மாணவா்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினா்.

திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். இதில் திருத்தணி வட்டாரத்துக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

விழாவுக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மாலதி முன்னிலை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் சரவணன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலா்கள் வீரராகவன், கிரிஜா ஆகியோா் கலந்து கொண்டு கலைத்திருவிழாவை தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து மாணவா்களுக்கு பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆா்வத்துடன் பங்கேற்றனா். இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலை சாா்ந்த போட்டிகளில் மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் திருத்தணி வட்டாரத்தின் சாா்பில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனா்.

விழாவில் பட்டதாரி ஆசிரியா்கள் யாஸ்மின் தாஜ், புவனேஸ்வரி உள்ளிட்டோா் நடுவா்களாக செயல்பட்டனா். இறுதியாக ஒருங்கிணைப்பாளா் ரவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.