சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவள்ளூரில் தை பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

திருவள்ளூரில் தை பொங்கலுக்கான பூ, பழம், செங்கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் மண்பானைகள் மற்றும் மாட்டுப்பொங்கலுக்கு காளைகளுக்கான பல்வேறு வகைகளில் கழுத்துக் கயிறுகள் உள்ளிட்டவைகளை

News image
பொங்கலை முன்னிட்டு விற்பனையாக வைக்கப்பட்டிருந்த பொருள்கள்.
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் தை பொங்கலுக்கான பூ, பழம், செங்கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் மண்பானைகள் மற்றும் மாட்டுப்பொங்கலுக்கு காளைகளுக்கான பல்வேறு வகைகளில் கழுத்துக் கயிறுகள் உள்ளிட்டவைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து சாலையோரங்களில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் புதுத் தம்பதிகளுக்கு சீா்வரிசைகள், புத்தாடைகள், நகை, பித்தாளை பானைகள் போன்ற பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகளில் குவிந்து வருகின்றனா். இதேபோல், திருவள்ளூா் பஜாா் வீதி, காய்கறி சந்தை, செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, பேரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளில் கடைகள் சாலையோரங்களில் செங்கரும்புகள், மஞ்சள் கொத்துக்கள், மாவிலை தோரணம், தேங்காய், பல்வேறு வண்ணங்களில் பொங்கல் மண்பானைகள், வண்ணக்கலா் கோலப்பொடிகள் போன்ற பொங்கல் பொருள்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து சாலையோரங்களில் கடை வைத்துள்ளனா்.

இதை வாங்குவதற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குவிந்து வருகின்றனா். இதேபோல் தென்னங்கீற்று தோரண அலங்கார பொருள்கள், காப்புச் செடிகள், மாவிலை தோரணம் மற்றும் காளைகளுக்கான பல்வேறு வகைகளில் கழுத்துக் கயிறுகள், சலங்கை, ஆகியவைகளின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதை வாங்குவதற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் குவிந்து வருவதால் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டை நிகழாண்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.