அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

அடிப்படை வசதிகள் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தினர்!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி...

News image

போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தினர் - படம் - தினமணி

Updated On :9 ஜூலை 2026, 12:27 pm IST

திருவள்ளூரில் பட்டா, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை (ஜூலை 9) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு குடும்ப அட்டை,100 நாள் அட்டை, ஜாதி சான்று, நலவாரிய அட்டை ,குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை, தொகுப்பு வீடுகள், குடிமனை பட்டா, மயானம் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த காத்திருக்கும் போராட்டத்துக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு கலந்து கொண்டு போராட்டத்தை தொடக்கி வைத்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறியதால் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Members of the Tribal People's Association staged a sit-in protest in Tiruvallur on Thursday (July 9), demanding basic amenities such as land titles (patta), drinking water, and electricity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.