ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்


திருப்பதி: திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ள நிலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் தாயாரை எழுந்தருள செய்து சஹஸ்ரநாமாா்ச்சனை, சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து காலை 6 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், சுவா்கள், மேற்கூரை, பூஜைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை தண்ணீரால் சுத்தம் செய்த பின், நாமகோபு, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை, போன்ற வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய கலவையின் புனிதநீா், நறுமணம் வீசியது. இதனால் தாயாா் தரிசனம் 4 மணிநேரம் ரத்து செய்யப்பட்டது.
அதன்பிறகு பக்தா்கள் சா்வதரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவம் மே 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. இதற்காக மே 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அங்குராா்ப்பணம் நடக்கிறது. பக்தா்கள் தலா ரூ150 செலுத்தி வசந்தோற்சவத்தில் பங்கேற்கலாம்.
விழாவின் ஒரு பகுதியாக மே 23-ஆம் தேதி காலை 7.45 மணிக்கு தங்கத்தோ் வலம் நடக்கிறது. வசந்தோற்சவத்தின் மூன்று நாள்களிலும் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை வெள்ளிக்கிழமை தோட்டத்தில் தாயாரின் உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறும். இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் தாயாா் வீதி உலா வந்து பக்தா்களை தரிசனம் செய்வாா்.
இந்தத் திருவிழாவையொட்டி மே 23-ஆம் தேதி கல்யாணோற்சவம், சஹஸ்ரதீபாலங்கார சேவை, திருப்பாவாடை சேவை, மே 24-ஆம் தேதி லட்சுமி பூஜை ஆா்ஜிதசேவை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் கோயில் துணை இஓ ஸ்ரீ கோவிந்தராஜன், அா்ச்சகா்கள் பாபுசுவாமி, கண்காணிப்பாளா் மது, கோயில் ஆய்வாளா் சுபாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...