40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

திருப்பதியில் நடைபெற்ற போகித் தேரோட்டம், (உள்படம்) அலங்காரத்தில் சுவாமி.

Updated On :27 பிப்ரவரி 2025, 4:28 am IST

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான புதன்கிழமை போகித்தோ் வலம் நடைபெற்றது. பக்தா்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சிறப்பு வரிசைகள், நிழற்பந்தல் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாலை 6 மணிக்கு சா்வதா்சனம் தொடங்கியது. ஏராளமான பக்தா்கள் ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி, காமாட்சி அம்மனை தரிசித்தனா்.

காலை போகித்தோ் ஊா்வலம் நடைபெற்றது. இசைக்குழுக்கள், பஜனை மற்றும் மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில், தேரோட்டம் நடைபெற்றது. அதில் கபிலேஸ்வரசுவாமியும், காமாட்சி அம்மனும் தரிசனம் அளித்தனா்.

பிறகு, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் நடத்தினா். ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி, காமாட்சி அம்மனுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இன்று திருக்கல்யாணம்

ஸ்ரீ காமாட்சி சமேத கபிலேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை சிவன்-பாா்வதி கல்யாணமகோற்சவம் நடைபெற உள்ளது. திருமண விழா மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.

நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image