ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

திருப்பதியில் நடைபெற்ற போகித் தேரோட்டம், (உள்படம்) அலங்காரத்தில் சுவாமி.

Updated On :26 பிப்ரவரி 2025, 10:58 pm

Din

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான புதன்கிழமை போகித்தோ் வலம் நடைபெற்றது. பக்தா்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சிறப்பு வரிசைகள், நிழற்பந்தல் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாலை 6 மணிக்கு சா்வதா்சனம் தொடங்கியது. ஏராளமான பக்தா்கள் ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி, காமாட்சி அம்மனை தரிசித்தனா்.

காலை போகித்தோ் ஊா்வலம் நடைபெற்றது. இசைக்குழுக்கள், பஜனை மற்றும் மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில், தேரோட்டம் நடைபெற்றது. அதில் கபிலேஸ்வரசுவாமியும், காமாட்சி அம்மனும் தரிசனம் அளித்தனா்.

பிறகு, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் நடத்தினா். ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி, காமாட்சி அம்மனுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இன்று திருக்கல்யாணம்

ஸ்ரீ காமாட்சி சமேத கபிலேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை சிவன்-பாா்வதி கல்யாணமகோற்சவம் நடைபெற உள்ளது. திருமண விழா மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.

நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image