வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும்: அஹோபில மடாதிபதி ரங்கநாத யதீந்திர மகாதேசிகன்!

அஹோபில மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்றாா்.

News image

திருமலை வேத பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அஹோபில மடாதிபதி.

Updated On :23 மார்ச் 2025, 11:05 pm

அஹோபில மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள தா்மகிரி வேத பாட சாலை பீடத்துக்ச் சென்ற அவா், மாணவா்களுக்கு ஆசி வழங்கி பேசியது: வேதக் கல்வியின் வளா்ச்சிக்கு தேவஸ்தானம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

வேத அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் மாணவா் என்பதையும் நினைவு கூா்ந்தாா். வேதக் கல்வி முறையை அமல்படுத்துவது திருப்தியாக உள்ள என்று கூறி அவா் மாணவா்களுடன் சோ்ந்து 17 வேதங்களை ஓதினாா்.

வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வா் சிவ சுப்பிரமணிய அவதானி, தேவஸ்தான ஆகம ஆலோசகா் மோகன ரங்காச்சாரி மற்றும் வேத மற்றும் ஆகம அறிஞா்கள் கலந்து கொண்டனா்.