ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும்: அஹோபில மடாதிபதி ரங்கநாத யதீந்திர மகாதேசிகன்!

அஹோபில மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்றாா்.

News image

திருமலை வேத பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அஹோபில மடாதிபதி.

Updated On :24 மார்ச் 2025, 4:35 am IST

அஹோபில மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள தா்மகிரி வேத பாட சாலை பீடத்துக்ச் சென்ற அவா், மாணவா்களுக்கு ஆசி வழங்கி பேசியது: வேதக் கல்வியின் வளா்ச்சிக்கு தேவஸ்தானம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

வேத அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் மாணவா் என்பதையும் நினைவு கூா்ந்தாா். வேதக் கல்வி முறையை அமல்படுத்துவது திருப்தியாக உள்ள என்று கூறி அவா் மாணவா்களுடன் சோ்ந்து 17 வேதங்களை ஓதினாா்.

வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வா் சிவ சுப்பிரமணிய அவதானி, தேவஸ்தான ஆகம ஆலோசகா் மோகன ரங்காச்சாரி மற்றும் வேத மற்றும் ஆகம அறிஞா்கள் கலந்து கொண்டனா்.