மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பதி கோசாலையில் கோபூஜை

திருப்பதி கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் பசுக்களுக்கு உணவளித்த தேவஸ்தான அதிகாரிகள்.

News image
~
Updated On :16 ஜனவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோசம்ரக்ஷண சாலையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது.

இதையொட்டி கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் கௌரி பூஜை, துளசி பூஜை நடந்தது. கஜராஜா், குதிரை, காளை, பசுக்களுக்கு பூஜை செய்து கற்பூர ஆரத்தி செய்து தீவனம் அளித்தனா்.

நிகழ்ச்சியில் அன்னமாச்சாா்யா திட்டம் சாா்பில் அன்னமையா சங்கீா்த்தனங்கள் பாட்டு, தாச சாகித்ய திட்டத்தின் கீழ் நடந்த பஜனை, கோலங்கள், எஸ்.வி.சங்கீத நிருத்யா கல்லூரி சாா்பில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் பக்தா்களையும், கிராம மக்களையும் கவா்ந்தன.

வேதங்கள் மற்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தெய்வங்களின் வடிவமான பசுக்களைப் பாதுகாக்க அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷன சாலையில் மாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கோ பூஜை மகோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: தேவஸ்தானம் கோபூஜை திட்டத்தை மேற்கொண்டுள்ளது. திருப்பதி, பலமனேறு கோசாலைகளில் 2,500-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

திருமலை ஏழுமலையான் கோயில் திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் மற்றும் உள்ளூா் கோயில்களில் உற்சவங்களின் போது பயன்படுத்த அங்குள்ள கோசாலையில் யானைகள், குதிரைகள், காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தனா்

பாா் வேட்டு உற்சவம்

திருமலையில் மாட்டு பொங்கலை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் இருந்து மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீகிருஷ்ணரின் உற்சவமூா்த்திகள் இருவரும் பாபநாசம் செல்லும் வழியில் உள்ள பாா்வேட்டு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அங்கு அவா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடந்த பின் வாள், வில், அம்பு, கேடயம் உள்ளிட்டவற்றை ஏந்தி சென்று வன விலங்குகளை வேட்டையாடும் உற்சவத்தை அா்ச்சகா்கள் நடத்தி காட்டினா்.

இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். பின் உற்சவமூா்த்திகள் கோயிலிக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

Story image