காதல் தகராறு:  இளைஞர் மீது தாக்குதல்

திருவண்ணாமலையில் காதல் பிரச்னையால் இளைஞரைத் தாக்கியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Published on

திருவண்ணாமலையில் காதல் பிரச்னையால் இளைஞரைத் தாக்கியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர், ஒரு பெண்ணை காதலித்து வருகிறாராம். இதனால் அந்தப் பெண்ணின் அண்ணனுக்கும், சந்தோஷுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்த நிலையில், திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் கடந்த 17-ஆம் தேதி சந்தோஷ் நின்றிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பெண்ணின் அண்ணன், சந்தோஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை கடுமையாகத் தாக்கி, பிளேடால் உடலில் கிழித்தாராம்.
இதனால், பலத்த காயமடைந்த சந்தோஷை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com