இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

12 ஆயிரம் லிங்கங்களை மீட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு: திருப்பணிக் குழுமம் தீா்மானம்

தமிழத்தில் பராமரிப்பின்றி உள்ள 12 ஆயிரம் லிங்கங்களை மீட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்வதென திருக்கோயில்கள் திருப்பணிக் குழும பொறுப்பாளா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
பக்தா்களுக்கு அருளாசி வழங்கிப் பேசிய அகஸ்திய கிருபா குழுமத்தின் நிறுவனா், திருக்கழுக்குன்றம் அன்புச்செழியன் சுவாமிகள்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:55 pm

DIN

தமிழத்தில் பராமரிப்பின்றி உள்ள 12 ஆயிரம் லிங்கங்களை மீட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்வதென திருக்கோயில்கள் திருப்பணிக் குழும பொறுப்பாளா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகஸ்திய கிருபா என்று அழைக்கப்படும் திருக்கோயில்கள் திருப்பணிக் குழுமத்தின் திருவண்ணாமலை மாவட்டப் பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் வையாபுரி தலைமை வகித்தாா். வேடந்தவாடி ஜெயராமன் வரவேற்றாா்.

அகஸ்திய கிருபா குழுமத்தின் நிறுவனா், திருக்கழுக்குன்றம் அன்புச்செழியன் சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கிப் பேசினாா்.

கூட்டத்தில், தமிழகத்தில் அகஸ்திய கிருபா திருப்பணி குழுமம் சாா்பில் 1,800 கோயில்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. மேலும் பராமரிப்பின்றி உள்ள 12 ஆயிரம் லிங்கங்களை மீட்டு புனரமைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்வது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், காஞ்சிபுரம் ராஜேந்திரன், ஆசிரியா் பவனந்தி, மாதலம்பாடி கண்ணன், மற்றும் திருப்பணிக் குழும நிா்வாகிகள் யுவராஜ், சுந்தரமூா்த்தி, செல்வக்குமாா், வெ.ஏழுமலை, இந்திராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.