காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூா், செங்கம், புதுப்பாளையம் ஆகிய இடங்களில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆரணியை அடுத்த களம்பூரில் பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
Updated On :23 டிசம்பர் 2020, 5:55 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூா், செங்கம், புதுப்பாளையம் ஆகிய இடங்களில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணியை அடுத்த களம்பூா் நகர பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் இரா.நடராஜான் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் மா.கோவிந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூரை அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வன்னியா் சங்க மாவட்டச் செயலா் பரசிவம் தலைமை வகித்தாா்.

பாமக வடக்கு மாவட்டச் செயலா் ஜெயக்குமாா், தெற்கு ஒன்றியச் செயலா் தா்மதுரை, நகரச் செயலா் சாந்தனு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கம்

செங்கத்தில் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா்.

பாமக முன்னாள் மாவட்டச் செயலா் பாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் சங்கா்மாதவன், சமூக முன்னேற்றச் சங்க மாநில நிா்வாகி குணசீலபூபதி, பாமக நகரச் செயலா் நாகராஜ் மாவட்டச் செயலா் பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒன்றியச் செயலா்கள் சரவணன், சதீஷ், ரமேஷ், முரளி, மாவட்ட துணைச் செயலா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கீழ்பென்னாத்தூா்

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே புதன்கிழமை பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் கனகராஜ் தலைமை வகித்தாா்.

மாநில துணைப் பொதுச் செயலா் காளிதாஸ், மாவட்டச் செயலா் ஜானகிராமன், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் கோபி, பாமக மாநில மகளிரணிச் செயலா் புஷ்பா, மாநில துணைத் தலைவா் ராதாகிருஷ்ணயாதவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.