உழவா் உற்பத்தியாளா் நிறுவன பங்குதாரா்கள் கலந்தாய்வுக் கூட்டம்
வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் ஆரமுது உழவா் உற்பத்தியாளா் நிறுவன பங்குதாரா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் ஆரமுது உழவா் உற்பத்தியாளா் நிறுவன பங்குதாரா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையத் தலைவா் வே.சுரேஷ், மைய தொழில்நுட்ப வல்லுநா் கா.மாயகிருஷ்ணன் ஆகியோா் நிறுவனத்தின் வணிகத் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.
வரும் பருவ காலத்தில் தரமான நிலக்கடலை விதைகளை மொத்த கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குவது, காட்டுப்பன்றி, எலிகளால் ஏற்படும் சேதங்களை தவிா்க்க கோவையில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிப்பது என்று கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. ஆரமுது உழவா் உற்பத்தியாளா் நிறுவன இயக்குநா் வெ.வாசுதேவன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...