நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை
வந்தவாசி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடும் பணியாளா்கள் தங்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகவும், பேசுவதாகவும் புகாா் தெரிவித்து


வந்தவாசி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடும் பணியாளா்கள் தங்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகவும், பேசுவதாகவும் புகாா் தெரிவித்து, விவசாயிகள் அந்த கொள்முதல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு அந்தப் பகுதி விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை சனிக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்தனா். அப்போது, அங்கிருந்த எடைபோடும் பணியாளா்கள் விவசாயிகளிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதுடன், தரக்குறைவாகவும் பேசினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் எடைபோடும் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நெல் கொள்முதல் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்கள் முழக்கமிட்டனா்.
இதைடுத்து அங்கு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய மேற்பாா்வையாளா் சிவக்குமாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...