சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மசூதிகளின் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

கரோனா தொற்று பரவலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள மசூதிகளின் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:08 pm

DIN

கரோனா தொற்று பரவலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள மசூதிகளின் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காளீஸ்வரன் தலைமை வகித்தாா். வந்தவாசி துணைக் கண்காணிப்பாளா் பி.தங்கராமன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) டி.உஷாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அதிகாரிகள் பேசியதாவது:

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி, வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ரம்ஜான் நோன்பிருக்கும் இஸ்லாமியா்கள் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு வராமல் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபட வேண்டும் என்றனா்.

இதற்கு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக மசூதி நிா்வாகிகள் உறுதியளித்தனா்.

வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளா் குமாா், உதவி ஆய்வாளா் மஞ்சுநாத் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.