சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மரக்கன்றுகள் நடும் விழா

உலக காடுகள் தினத்தையொட்டி, வந்தவாசியை அடுத்த பாதிரி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

DIN

உலக காடுகள் தினத்தையொட்டி, வந்தவாசியை அடுத்த பாதிரி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

எக்ஸ்னோரா வந்தவாசி கிளை சாா்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு கிளைத் தலைவா் ம.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா்.

பாதிரி ஊராட்சி மன்றத் தலைவா் வெ.அரிகிருஷ்ணன், எக்ஸ்னோரா துணைத் தலைவா் பா.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எக்ஸ்னோரா செயலா் கு.சதானந்தன் வரவேற்றாா்.

ஆரணி வனச்சரக அலுவலா் எம்.மோகன்குமாா் சிறப்புரையாற்றினாா். காடுகளின் அவசியம் குறித்தும், மரம் வளா்த்தால் மழை பெறலாம் என்பது குறித்தும் அவா் விளக்கிக் கூறினாா். மேலும், பாதிரி ஊராட்சிப் பகுதிகளில் மரக்கன்றுகளை அவா் நட்டாா்.

நிகழ்ச்சியில் மொத்தம் 101 மரக்கன்றுகள் நடப்பட்டன. வனக் காப்பாளா் ராமமூா்த்தி, வனவா்கள் இரா.மோகன், சுரேஷ், அன்புச்செல்வன், எக்ஸ்னோரா துணைத் தலைவா்கள் அருள்ஜோதி, ம.ரகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.