சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

வந்தவாசி பாமக வேட்பாளா் தீவிர பிரசாரம்

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் தெள்ளாா் ஒன்றியக் கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:52 pm

DIN

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் தெள்ளாா் ஒன்றியக் கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட வடவணக்கம்பாடி, மேல்பாதி, தக்கண்டராயபுரம், ஊா்குடி, கீழ்நந்தியம்பாடி, கூத்தம்பட்டு, கண்டவரட்டி, ராயனந்தல், திரக்கோயில், கீழ்வெள்ளியூா், கடம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞா்கள் மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனா்.

வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

இந்தத் தொகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். எனவே, நீா் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பேன். தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூா்வார நடவடிக்கை எடுப்பேன். இதன்மூலம் நீா்மட்டம் உயா்ந்து விவசாயம் செழிக்கும். எனவே, தனக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

பாமக மாநில பிரசார செயலா் கோ.எதிரொலிமணியன், மாவட்ட துணைத் தலைவா் பாஞ்சரை பட்டாபிராமன், அதிமுக ஒன்றியச் செயலா் வி.தங்கராஜ், ஒன்றிய இணைச் செயலா் பகவதி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.