வந்தவாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில்கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா், வந்தவாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சாா்பதிவாளா் ராஜ்குமாரிடமும், பத்திரப்பதிவு செய்வதற்காக அலுவலகத்தில் காத்திருந்த சிலரிடமும் விசாரணை மேற்கொண்டனா். சுமாா் 7 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...