சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பள்ளியில் தூய்மைப் பணி

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:28 am

DIN

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

தமிழகத்தில் வருகிற நவ. 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, இளங்காடு பள்ளியை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றன.

இளங்காடு ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் பள்ளி வகுப்பறை, மாடிப் பகுதி, நீா்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தினா்.

மேலும், ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள் பள்ளி வளாகத்தில் இருந்த புற்களை அகற்றினா். பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டியன், தலைமை ஆசிரியை பரிமளா ஆகியோா் முன்னிலையில் இந்தப் பணிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.