சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பணித்தள பொறுப்பாளா் மீது தாக்குதல்: பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலைத் திட்ட பணித்தள பொறுப்பாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:13 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலைத் திட்ட பணித்தள பொறுப்பாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி அலமேலு (36). இவா், அந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறாா். இதே கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி சாந்திக்கு (38), அவா் சரியாக வேலை செய்வதில்லை எனக் கூறி, வேலை வழங்க அலமேலு மறுத்தாராம்.

இந்த நிலையில், கடந்த ஆக.26-ஆம் தேதியன்று ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்ற சாந்தி, அங்கிருந்த அலமேலுவிடம் தகராறு செய்தாராம். தனக்கு வேண்டுமென்றே வேலை தர மறுப்பதாக கூறி, அலமேலுவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து அலமேலு அளித்த புகாரின்பேரில், சாந்தி மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.