திருவண்ணாமலை
ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் பண்டரி பஜனை
வந்தவாசியை அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் 72-ஆவது ஆண்டு பண்டரி பஜனை கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் 72-ஆவது ஆண்டு பண்டரி பஜனை கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
இதையொட்டி நாள்தோறும் காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை ஆராதனை பஜனையும் நடைபெற்றது.
புதன்கிழமை இரவு கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா சென்றாா்.
இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பஜனை குழுவினா் பங்கேற்று பஜனை பாடல்களை பாடியவாறு உடன் சென்றனா்.
விழாவில் ஸ்ரீகோதண்டராமா் பஜனை குழுவினா், ஸ்ரீஆளவந்தாா் வைணவ சபை நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.