மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்: 210 பேருக்கு அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்: 210 பேருக்கு அடையாள அட்டை

Published on

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 210 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரித்தாா். இதில், அடையாள அட்டை கோரி 387 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் அளித்தனா். இவா்களில் தகுதியான 210 பேருக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அடையாள அட்டைகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா். மேலும், 27 பேருக்கு பேருந்துப் பயண அட்டைகளும், 21 பேருக்கு ரயில் பயணச் சலுகை அட்டைகளும், 2 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டன. முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com