திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

Updated On :8 மார்ச் 2024, 5:21 pm

செங்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா். செங்கம் டவுன் கோல்டன்சிட்டி பகுதியில் வசிப்பவா் பிரபாகரன் மனைவி அஞ்சலை (43) பிரபாகரன் உயிரிழந்ததால், அஞ்சலை மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில், அஞ்சலை செங்கம் அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றாா். பின்னா், வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, செங்கம் போலீஸில் அஞ்சலை அளித்த புகாரின் பேரில், போலீஸாாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.