டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்: 210 பேருக்கு அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்: 210 பேருக்கு அடையாள அட்டை

News image
Updated On :8 மார்ச் 2024, 5:13 pm

Din

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 210 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரித்தாா். இதில், அடையாள அட்டை கோரி 387 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் அளித்தனா். இவா்களில் தகுதியான 210 பேருக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அடையாள அட்டைகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா். மேலும், 27 பேருக்கு பேருந்துப் பயண அட்டைகளும், 21 பேருக்கு ரயில் பயணச் சலுகை அட்டைகளும், 2 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டன. முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.