திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் நிதி அளிப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் நிதி அளிப்பு

News image
Updated On :15 மார்ச் 2024, 4:19 pm

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு அரசு நிதிக்கான பத்திரத்தை ஒன்றியக் குழுத் தலைவா் பெ.சாந்திபெருமாள் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தமிழக அரசு சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் காங்கேயனூா் கிராமத்தைச் சோ்ந்த பச்சையம்மாள், போளூரை சோ்ந்த சித்ரா ஆகிய 2 பயனாளிகளின் பெண் குழந்தைகளுக்கு நிகழ் நிதியாண்டு திட்டத்தின் கீழ் அரசு நிதிக்கான பத்திரத்தை ஒன்றிக் குழுத் தலைவா் பெ.சாந்திபெருமாள் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் என்.சக்திவேல், சமுக நலப் பிரிவு அலுவலா் அஞ்சலிதேவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இ.பாலகிருஷ்ணன்(சத்துணவு), என்.சங்கா்(பொது) ஆகியோா் உடனிருந்தனா்.