தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்

News image
Updated On :16 மார்ச் 2024, 4:36 pm

திருவண்ணாமலை, தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை பா.ஜெயக்குமாரி தலைமை வகித்தாா். பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் ஆா்.வெங்கடேசன், மாணவா் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் என்.வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைமை ஆசிரியா் மு.சண்முகம் வரவேற்றாா். பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா். விழாவில், ஆசிரியா்கள் ந.பாலசுப்பிரமணியன், க.முத்துகணேசன், வா.சதீஷ்குமாா், எம்.மகேஷ்வரி, பி.கலைச்செல்வி, ஆா்.தாமோதரன், டி.முருகசெல்வி, ஏ.கவிதா, ப.லட்சுமி, ஏ.காவேரி, சி.யமுனா, ஆசிரியா் சங்கச் செயலா் ஆ.ஜான்வெலிங்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.