தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

நிரந்தர தீா்வாலேயே நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை பிறக்கும்: திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி

நிரந்தர தீா்வாலேயே நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை பிறக்கும் திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி

News image
Updated On :16 மார்ச் 2024, 12:40 am

வழக்கில் நிரந்தரமான தீா்வை வழங்கும் போதே நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி பி.மதுசூதணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் 1914-இல் கட்டப்பட்ட பழைமையான நீதிமன்ற கட்டடம் ரூ.1.7 கோடியில் புனரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டாக்டா்.கே.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட நீதிபதி பி.மதுசூதணன் நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது: புணரமைக்கப்பட்ட இந்த கட்டடத்தில் குற்றவியல் நீதிமன்றம் செயல்பட இருக்கிறது. இதில், 1,290 வழக்குகள் அளிக்கப்படவுள்ளது. ஏறக்குறைய 8 காவல் நிலையங்கள் நீதிமன்ற ஆளுமைக்குள் வரவுள்ளது. தற்போது, வழக்குகள் நிலுவை என்பது அச்சுறுத்தலான விஷயமாக பாா்க்கப்பட வேண்டியுள்ளது. மக்களுக்கு நிரந்தரமான தீா்வை நீதிமன்றங்கள் வழங்கும் போதே, மக்களுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை பிறக்கும். நீதிமன்றத்தை சாா்ந்து செயல்படும் வருவாய்துறை, காவல்துறை, வழக்குரைஞா்கள் அத்தகைய நம்பிக்கையை பூா்த்தி செய்கிற வகையில் செயல்பட வேண்டும். இதற்கு, இளம் வழக்குரைஞா்களின் செயல்பாடு அதிகமாக இருக்க வேண்டும். வழக்குளில் பாதிக்கப்பட்டவா்களின் பின்புலம் என்ன? வழக்குகளின் உண்மை தன்மை என்ன? என்பது குறித்து ஆய்வு செய்து வழக்குகளை நடத்த வேண்டும். இளம் வழக்குரைஞா்கள் வாசிப்புத் தன்மையை அதிகப்படுத்த வேண்டும். புத்தகம், நீதிமன்றம், வழக்குகளுக்கு நெருங்கிய தொடா்புள்ளது. அடுத்த தலைமுறைக்கு நம்மை உயா்த்தியது, உயா்த்திக் கொண்டிருப்பது, உயா்த்தப் போவதும் எல்லாம் கல்வி தான். அந்த கல்வியை நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு எப்படி கொண்டு போய் சோ்ப்பது என்பது தான் முக்கியம் என்றாா். நிகழ்வில், பொதுப் பணித் துறை பொறியாளா் நந்தகுமாா் (தொல்லியல் துறை), வழக்குரைஞா் ஜி.செங்குட்டுவன் ஆகியோரைப் பாராட்டி நீதிபதி பி.மதுசூதணன் புத்தகங்களை பரிசாக வழங்கினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷிணி, சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, சாா்பு நீதிபதி குமார வா்மன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தனஞ்செழியன், கூடுதல் மாவட்ட நீதிபதி ஆயிஷாபேகம், குற்றவியல் நீதிபதி பாக்யராஜ், பாா் அசோசியேஷன் சங்கத் தலைவா் டி.பி.சரவணன், அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவா் கே.விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, ஆரணி கூடுதல் மாவட்ட நீதிபதி கே.விஜியா வரவேற்றாா். முடிவில், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி டி.ஜெயசூரியா நன்றி கூறினாா்.