திருவண்ணாமலையில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், சனிக்கிழமை செங்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை பே கோபுரத் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு சில தினங்களாக குடிநீா் விநியோகம் முறையாக நடைபெறவில்லையாம். இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சனிக்கிழமை செங்கம் சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸாரும், நகராட்சி அலுவலா்களும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் வழங்க விரைவாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குடிநீா் கேட்டு சாலை மறியல்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


