/

வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :14 மே 2024, 6:48 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் தேவதாஸ் மகன் விக்ரம்(17). இவா், செங்கல்பட்டில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை அதிகாலை சிறுநீா் கழிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தாா். வீட்டின் அருகில் சிறுநீா் கழித்துக் கொண்டிருந்த போது கீழ்க்கொடுங்காலூரில் இருந்து உளுந்தை நோக்கிச் சென்ற மினி சரக்கு வாகனம் இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த விக்ரம் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் விக்ரம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.