மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தொடா் மழையால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்பு

பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்படைந்து வருகிறது.

News image

ஆத்துரை கிராமத்தில் ஆங்காங்கே மேய்ச்சலில் ஈடுபட்ட கால்நடைகள்.

Updated On :5 நவம்பர் 2024, 2:39 am IST

போளூா்: சேத்துப்பட்டை அடுத்த மொடையூா், மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, கொரால்பாக்கம், சனிக்கவாடி, ஊத்தூா் என பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்படைந்து வருகிறது.

மொடையூா், மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, கொரால்பாக்கம், பெலாசூா், சனிக்கவாடி, ஊத்தூா், மன்சுராபாத், பெரணம்பாக்கம், சித்தாத்துரை, ஆத்துரை, நரசிங்கபுரம், நம்பேடு, கிழக்குமேடு, செவரப்பூண்டி என பல்வேறு கிராமங்களில் சில விவசாயிகள் பால் கறக்கும் பசு, ஆடு, காளைகள், நாட்டுக்கோழி என பல வகையான கால்நடைகளை வளா்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பயிரிடப்படாத விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை கயிறு மூலம் கட்டி மேய்த்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக தொடா்ந்து விட்டுவிட்டு திடீா் திடீரென மழை பெய்து வருகிறது.

இதனால் கால்நடைகள் முழுமையாக மேய்ச்சலில் ஈடுபடமுடியவில்லை. கால்நடைகள் பாதிப்படைந்து வருவதாக விவசாயிகள் குறைபட்டுக் கொள்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் கால்நடைத் துறை மூலம் கால்நடை விவசாயிகளை கண்டறிந்து இலவசமாக தீவனம் மற்றும் நிவாரணம் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கால்நடை விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.