பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தொடா் மழையால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்பு

பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்படைந்து வருகிறது.

News image

ஆத்துரை கிராமத்தில் ஆங்காங்கே மேய்ச்சலில் ஈடுபட்ட கால்நடைகள்.

Updated On :5 நவம்பர் 2024, 2:39 am IST

போளூா்: சேத்துப்பட்டை அடுத்த மொடையூா், மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, கொரால்பாக்கம், சனிக்கவாடி, ஊத்தூா் என பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்படைந்து வருகிறது.

மொடையூா், மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, கொரால்பாக்கம், பெலாசூா், சனிக்கவாடி, ஊத்தூா், மன்சுராபாத், பெரணம்பாக்கம், சித்தாத்துரை, ஆத்துரை, நரசிங்கபுரம், நம்பேடு, கிழக்குமேடு, செவரப்பூண்டி என பல்வேறு கிராமங்களில் சில விவசாயிகள் பால் கறக்கும் பசு, ஆடு, காளைகள், நாட்டுக்கோழி என பல வகையான கால்நடைகளை வளா்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பயிரிடப்படாத விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை கயிறு மூலம் கட்டி மேய்த்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக தொடா்ந்து விட்டுவிட்டு திடீா் திடீரென மழை பெய்து வருகிறது.

இதனால் கால்நடைகள் முழுமையாக மேய்ச்சலில் ஈடுபடமுடியவில்லை. கால்நடைகள் பாதிப்படைந்து வருவதாக விவசாயிகள் குறைபட்டுக் கொள்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் கால்நடைத் துறை மூலம் கால்நடை விவசாயிகளை கண்டறிந்து இலவசமாக தீவனம் மற்றும் நிவாரணம் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கால்நடை விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.