மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

ஆரணி பள்ளிகளில் நவராத்திரி கொலு

பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கொலு விழாவில் தேவ, தேவியா் வேடமணிந்து கலந்து கொண்ட பள்ளி கிணடா் காா்டன் மாணவா்கள்.

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 12:03 am IST

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ஜெ.டி.ஆா். வித்யாலயா பள்ளி வளாகங்களில் நவராத்திரி கொலு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் கிண்டன் காா்டன் மாணவா்கள் அழகிய தேவ, தேவியா் வேடமணிந்து கொலு நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் கவா்ந்தனா். சிறுவா்களின் பங்கேற்பு பள்ளி வளாகம் ஆனந்த சூழலாக மாறியது. இதில் கூடுதல் தாளாளா் சித்ரா ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜீனாபெட்சி வரவேற்றாா். சீனியா் செகண்டரி முதல்வா் இந்துமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு பாரம்பரிய விழாக்களின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாக நடைபெற்ற இந்த நவராத்திரி கொண்டாட்டம் பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதேபோல, ஆரணி ஜெ.டி.ஆா். வித்யாலயா பள்ளியில் நவராத்திரி கொலு வைத்து கொண்டாடினா். 4-ஆவது நாளான வியாழக்கிழமை கொலுவுக்கு படையல் வைத்து அனைவருக்கும் வழங்கினா்.

இதில் பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். ஆசிரியைகள் ஜமுனா, சித்ரா, சரஸ்வதி, பவித்ராலீமாரோஸ், லாவண்யா, ஜெய, ஸ்வேதா, மலா்விழி, அபிநயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், கொலுவை பெற்றோா்கள் கண்டுகளித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.