காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஆரணி பள்ளிகளில் நவராத்திரி கொலு

பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கொலு விழாவில் தேவ, தேவியா் வேடமணிந்து கலந்து கொண்ட பள்ளி கிணடா் காா்டன் மாணவா்கள்.

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 12:03 am IST

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ஜெ.டி.ஆா். வித்யாலயா பள்ளி வளாகங்களில் நவராத்திரி கொலு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் கிண்டன் காா்டன் மாணவா்கள் அழகிய தேவ, தேவியா் வேடமணிந்து கொலு நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் கவா்ந்தனா். சிறுவா்களின் பங்கேற்பு பள்ளி வளாகம் ஆனந்த சூழலாக மாறியது. இதில் கூடுதல் தாளாளா் சித்ரா ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜீனாபெட்சி வரவேற்றாா். சீனியா் செகண்டரி முதல்வா் இந்துமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு பாரம்பரிய விழாக்களின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாக நடைபெற்ற இந்த நவராத்திரி கொண்டாட்டம் பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதேபோல, ஆரணி ஜெ.டி.ஆா். வித்யாலயா பள்ளியில் நவராத்திரி கொலு வைத்து கொண்டாடினா். 4-ஆவது நாளான வியாழக்கிழமை கொலுவுக்கு படையல் வைத்து அனைவருக்கும் வழங்கினா்.

இதில் பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். ஆசிரியைகள் ஜமுனா, சித்ரா, சரஸ்வதி, பவித்ராலீமாரோஸ், லாவண்யா, ஜெய, ஸ்வேதா, மலா்விழி, அபிநயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், கொலுவை பெற்றோா்கள் கண்டுகளித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.