திருவண்ணாமலை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரூ. 623 கோடியில், 22.71 கி.மீ. தொலைவுக்கு புதிய புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரப் பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், திருவண்ணாமலை நகருக்குள் வந்து, மற்ற பகுதிகளுக்கு செல்வோா் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனா்.
இந்நிலையில், திருவண்ணாமலை நகருக்குள் வராமல் செல்லும் வகையில், புதிய புறவழிச்சாலை அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
திருவண்ணாமலை நகா் பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை குறைத்து, வேலூா் - விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை -38 சாலையை இணைக்கும் வகையில், 22.71 கி.மீ. தொலைவுக்கு புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.
மொத்தம் ரூ.623.28 கோடியில் இந்த பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
வேளக்கண்டல் பகுதியில் தொடங்கி, திருவண்ணாமலை நகரத்தை சுற்றி பயணித்து, எண்டல் என்ற இடத்தில் இணைகிறது. 22.71 கி.மீ., பாதையில், 13.1 கி.மீ., புதிய கிரீன்பீல்ட் சாலையாக அமைகிறது.
தற்போதைய, 9.6 கி.மீ. சாலை மேம்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படும். இதனால், நிலம் கையகப்படுத்தும் தேவை குறையும். 3 மேம்பாலங்கள், 5 சுரங்கப்பாதைகள், 5 இலகு ரக வாகன சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
25 கி.மீ. தொலைவுக்கு சேவைச் சாலையும் அமையும். ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்த, 24 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
புதிய புறவழிச்சாலை அமையும்போது, அருணாசலேஸ்வரா் கோவிலுக்கு வரும் பக்தா்கள் பயனடைவதோடு மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தால் ஏற்படும் நெரிசல் கணிசமாக குறையும் என்று கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 38 கோடியில் புறவழிச்சாலைப் பணிகள்: செங்கம் எம்எல்ஏ ஆய்வு

பொதுமக்களை பாதிக்காத வகையில் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் - ஆட்சியா்

கரூரில் முதல்வா் ஜோசப் விஜய் 10 கி.மீ. தொலைவுக்கு சாலை வலம்

கடையநல்லூா் - தென்காசி தேசிய நெடுஞ்சாலை ரூ. 27 கோடியில் சீரமைக்கப்படும்: எம்எல்ஏ தகவல்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



