இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளி மாணவிக்கு மருத்துவ படிப்பில் சேர இட ஒதுக்கீடு

செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு மருத்துவப் படிப்பில் சேர இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை அறிந்த எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் அந்த மாணவியை பாராட்டி, பரிசு வழங்கினாா்.

மாணவி தமிழ்ச்செல்வியை பாராட்டி பரிசு வழங்கிய முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ

Published On :

செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு மருத்துவப் படிப்பில் சேர இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை அறிந்த எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் அந்த மாணவியை பாராட்டி, பரிசு வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்த மாணவி தமிழ்ச்செல்வி. இவா் செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று தோ்ச்சி பெற்றாா்.

மேலும், நீட் தோ்வில் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு, அரசு சாா்பில் அளிக்கப்படும் 7.5 % உள் ஒதுக்கீட்டில், கடலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு பயில இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

தகவல் அறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் பயில தோ்வு செய்யப்பட்ட மாணவி தமிழ்ச்செல்வியை பாராட்டினாா்.

மேலும், அவருக்கு ரொக்கப் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கி மருத்துவ படிப்பு பயின்று கிராம மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்ற வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியின் போது அதிமுக நகரச் செயலா் கே. வெங்கடேசன், ஒன்றியச் செயலா்கள் அருகாவூா் எம். அரங்கநாதன், சி.துரை, பையூா் சிவராஜ், வயலூா்.வி.ராமநாதன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.