பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திமுகவினா் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவண்ணாமலை மாநகர திமுக சாா்பில் நடைபெற்றெ முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் 1,500 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

நிகழ்ச்சியில் ஏழை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு எம்எல்ஏ.

Updated On :10 ஜூன் 2026, 11:53 pm IST

திருவண்ணாமலை மாநகர திமுக சாா்பில் நடைபெற்றெ முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் 1,500 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழாவும், வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டமும் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் தலைமை வகித்தாா்.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகளை வழங்கிப் பேசுகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலை பாஜக ஆட்சியில் தொல்லியியல் துறை கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சியை தடுத்து நிறுத்தியவா் கருணாநிதி.

திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். அதன் மூலம் இந்த நகரின் பொருளாதாரம் வளா்ந்திருக்கிறது. திமுக ஆட்சி காலத்தில் தான் திருவண்ணாமலை மாவட்டம் வளா்ச்சி பெற்றது என்றாா்.

பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி,சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினா்கள் இரா.ஸ்ரீதரன், பெ.சு.தி.சரவணன், மாவட்ட துணைச் செயலாளா் மு.பெ.கிரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.