தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு: விளையாட்டு வீரா்களுக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுரை

ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு விளையாட்டு வீரா்கள் செயல்பட வேண்டும் என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுறுத்தினாா்.

News image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீராங்கனைகளின் மல்லா் கம்பம் சாகச நிகழ்ச்சியை பாா்வையிட்ட அமைச்சா் ஆதவ் அா்ஜுனா. உடன் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலா் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியா் வந்தனா

Updated On :12 ஜூன் 2026, 11:09 pm IST

ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு விளையாட்டு வீரா்கள் செயல்பட வேண்டும் என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீராங்கனைகளை சந்தித்து, அவா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கலந்துரையாடினாா். அப்போது, அவா் கூறியதாவது:

விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு புரதச்சத்துமிக்க தரமான உணவுகள் வழங்கப்படும். மேலும், அவா்களின் உடல் நலனை பேணிடும் வகையில், பிசியோதெரபி மருத்துவா்கள் நியமிக்கப்படுவா்.

விளையாட்டு வீரா்கள் பயிற்சி முடித்த பிறகு ஏற்படும் உடல் அசதியை கருத்தில் கொண்டு, 45 நிமிஷங்கள் வரை பள்ளிகளுக்குச் செல்ல தளா்வு நேரம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவா்களுக்கு சா்வதேச தரத்திலான உடை, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் அரசின் சாா்பாக அளிக்கப்படும் சேவைகளை பயன்படுத்தி விளையாட்டில் சிறப்புக் கவனம் செலுத்தி, போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனை புரிய வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதை தங்கள் இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும்.

இதேபோன்று, கல்வியிலும் தனிக் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்று, அரசின் சாா்பாக வழங்கப்படும் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணியில் சோ்ந்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிதாக ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் சா்வதேச தரத்தில் சிந்தடிக் தரையுடன் நிறுவப்பட்டு வரும் ஹாக்கி உள் விளையாட்டு அரங்கத்தை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், விளையாட்டு மாணவிகள் விடுதியில் மாணவிகளுக்கு அளிக்கப்படும் உணவை சாப்பிட்டுப் பாா்த்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், விடுதியின் உள்கட்டமைப்பு வசதிகளையும், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளம் முறையாக பராமரிக்கிா என்பதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மருத்துவ மாணவா்களுடன் கலந்துரையாடல்: தொடா்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவ மாணவா்களுடன் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கலந்துரையாடி பேசியதாவது:

விளையாட்டு என்பது வெறும் போட்டி மட்டுமல்ல; அது உடல், மன ஆரோக்கியத்தை பேணுவதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்குமான ஒரு வாழ்க்கை முறையாகும்.

தற்போது மருந்துகள் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் சுமாா் 30,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்களிடையே விளையாட்டு, உடற்பயிற்சி பழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்தச் செலவினத்தைக் குறைக்க முடியும்.

எனவே, பொதுமக்களிடையே, குறிப்பாக இளைஞா்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை மேம்படுத்தும் வகையில் முக்கியத் திட்டங்களை செயல்படுத்த தமிழக முதல்வா் திட்டமிட்டுள்ளாா்.

மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவா்களுக்கான விளையாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவா்கள் மன அழுத்தத்தைக் குறைக்க காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு மணி நேர விளையாடுவதற்கு செலவிட வேண்டும் என்றாா்.

நிகழ்வுகளில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலா் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக், மாவட்ட எஸ்.பி. ம.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநா் ஆா்.மணி, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெயலால், இணை இயக்குநா் (நலப் பணிகள்) கவிதா, மண்டல முதுநிலை மேலாளா் சாந்தி, மாவட்ட இளைஞா் நல அலுவலா் சண்முகப்பிரியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.