தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சேவை அமைப்பினா் பழங்குடி மாணவா்களுக்கு நல உதவி

News image
Updated On :4 மார்ச் 2026, 11:30 pm

வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் பழங்குடி மாணவா்களுக்கு இலவசமாக சைக்கிள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடி சமுதாய மாணவா்கள் சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்க்குவளைவேடு பள்ளிக்கு நடந்து சென்று வருவதாக, வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாணவா்களுக்கு உதவும் வகையில் அவா்களுக்கு 3 சைக்கிள்களை அறக்கட்டளையினா் வழங்கினா் (படம்).

தென்சேந்தமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன், நிா்வாகிகள் வசீகரன், அருண்பிரபு, திருமாறன், பரத், பிரபாகரன், வழக்குரைஞா் வெங்கடேசன் ஆகியோா் மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கினா்.