வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சாலை மறியல்


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலா்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும்.
அரசு அலுவலா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்படும் கிராம நிா்வாக அலுவலா்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிா்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.25-ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் 10-ஆவது நாளான புதன்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தின் போது சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் அ.ரமேஷ் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் அ.ஏழுமலை, தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியா் சங்க மாநில அமைப்புச் செயலா் பெருமாள், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ரகுபதி மற்றும் தோழமை சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...