இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரூ. 6.30 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம்

News image
Updated On :5 மார்ச் 2026, 12:49 am

Syndication

செய்யாற்றை அடுத்த புரிசை கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் ரூ.6.30 கோடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

அதே வேளையில், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், மண்டல பயிற்சி இணை இயக்குநா் ரமேஷ்குமாா், திருவத்திபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் பேபி ராணி பாபு, பயிற்சி நிலைய முதல்வா் துரைமுருகன் ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.

அதேபோல, செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தண்டரைக் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் கட்டப்படட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் மாமண்டூா் டி.ராஜி, திலகவதி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.