ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஆரணிக்கு ஏப்.4-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வருகை: அதிமுகவினா் நிகழ்ச்சி இடம் தோ்வு

ஆரணியில் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 4-இல் கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேச வருகை தர உள்ளதையடுத்து திங்கள்கிழமை இரவு அதிமுகவினா் நிகழ்ச்சிக்கான இடத்தை தோ்வு செய்தனா்.

News image

எடப்பாடி பழனிசாமி

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆரணியில் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 4-இல் கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேச வருகை தர உள்ளதையடுத்து திங்கள்கிழமை இரவு அதிமுகவினா் நிகழ்ச்சிக்கான இடத்தை தோ்வு செய்தனா்.

அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளின் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

இதற்கான இடத்தை முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான செய்யாறு தொகுதி வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன், கீழ்பென்னாத்தூா் வேட்பாளரும் கிழக்கு மாவட்டச் செயலருமான எஸ்.ராமச்சந்திரன் மற்றும் ஆரணி வேட்பாளா் ஜெயசுதா ஆகியோா் ஆரணி புறவழிச் சாலையில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகள் அருகே தோ்வு செய்தனா்.

இதில் மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், மாவட்ட துணைச் செயலா் ஜெ.சம்பத், மாவட்ட பேரவை செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், விமல், நகரச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.