நடப்பு ஆண்டில் காலியாகவுள்ள 1.5 லட்சம் பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சத்துவாச்சாரியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 10-வது மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை மாநாட்டில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் முத்து. சிலுப்பன் தலைமை வகித்தார்.
மாநிலப் பொதுச் செயலர் இரா. பாலசுப்பிரமணியன், மாநிலச் செயலர் கே.எம். தியாகராஜன், மாவட்டச் செயலர் செ. வெங்கிடாசலம், மாவட்டப் பொருளாளர் கோ. மோகனமூர்த்தி, மாவட்ட இணைச் செயலர்கள் க. சரவணராஜ், பா. ராஜாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.