வேலூர் நேதாஜி மார்க்கெட் சாலையைச் சீரமைக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சாலை சேறும், சகதியாகி குண்டும், குழியுமாக இருப்பதால் தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் சீரமைக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மார்க்கெட் வளாகத்தை சுத்தப்படுத்தி, சாலையைச் சீரமைக்கக் கோரி மார்க்கெட் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து கோரிக்கை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.