தரமற்ற குடிநீர்: தனியார் நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

அரக்கோணம் நகரில் தரமற்றக் குடிநீரை விற்பனை செய்ததாக தனியார் குடிநீர் நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். 
Updated on
1 min read

அரக்கோணம் நகரில் தரமற்றக் குடிநீரை விற்பனை செய்ததாக தனியார் குடிநீர் நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். 
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தரமற்ற உணவுப் பொருள்கள் இருப்பதாக வந்த தொடர் புகார்களை அடுத்து மாவட்டத்தின் அனைத்து உணவு மற்றும் உணவுப் பொருள்களை விற்கும் வணிக நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அரக்கோணத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் கே.எஸ்.தேவராஜ் பல்வேறு நிறுவனங்களில் சோதனை நடத்தினார். அதில் தரமற்றக் குடிநீரை உற்பத்தி செய்ததாக அரக்கோணத்தை அடுத்த அம்பரிஷபுரத்தில் உள்ள தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும், அங்கிருந்த குடிநீரின் மாதிரிகள் தொடர்ந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், அந்நிறுவன தயாரிப்புகளில் குறைகள் தெரியவந்தால் நிறுவனத்தை மூட பரிந்துரைக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.
தொடர்ந்து, நகரில் உள்ள பானிபூரி விற்கும் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் சோதனை மேற்கொண்டார். இதில், அனைத்து கடைகளிலும் இருந்த கலர் ஏற்றும் திரவங்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சாலைகளில் உள்ள உணவு விற்கும் வண்டிகளிலும் சோதனை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com