காட்பாடி அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காலி கோணிப்பைகள் எரிந்து சேதமடைந்தன.
காட்பாடி அருகே சேவூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்குத் தேவையான அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும், வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படும் ரேஷன் அரிசிகளும் இக்கிடங்கில்
ஒப்படைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இக்கிடங்கில் காலி கோணிப் பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காட்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், கிடங்கில் இருந்த ஏராளமான காலி கோணிப்பைகள் எரிந்து சேதமடைந்தன.
உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து காட்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.