சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக  விழாவையொட்டி சிறப்பு  அலங்காரத்தில்  காட்சியளித்த  சாமுண்டீஸ்வரி  அம்மன்
கும்பாபிஷேக  விழாவையொட்டி சிறப்பு  அலங்காரத்தில்  காட்சியளித்த  சாமுண்டீஸ்வரி  அம்மன்
Updated on
1 min read

ஆம்பூா்: ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலை கிராம மக்கள் சீரமைத்தனா். இதையடுத்து, கோவில் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை திருவலம் சாந்தா சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். அவா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com