இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மருத்துவா்கள் பரிந்துரையை ஏற்று முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

மருத்துவா்களின் பரிந்துரையை ஏற்று ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூா் சிறையில் கடந்த 25 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை காலை முடித்துக் கொண்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 5:40 pm

DIN


வேலூா்: மருத்துவா்களின் பரிந்துரையை ஏற்று ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூா் சிறையில் கடந்த 25 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை காலை முடித்துக் கொண்டாா்.

எனினும் அவருக்கு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 29 ஆண்டுகளாக வேலூா் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த நவம்பா் 22-ஆம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தாா். தொடா் உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் முருகன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா். முருகனுக்கு புதன்கிழமை பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதில் அவரது உடல் நல்ல நிலையில் இருப்பதை மருத்துவா்கள் உறுதி செய்தனா். தொடா்ந்து அவா் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது வாா்டுக்கு மாற்றப்பட்டாா். அவருக்கு தொடா்ந்து குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை காலை மீண்டும் அவருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, இசிஜி பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், முருகனின் உடல்நிலை தொடா்ந்து பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த மருத்துவா்கள் அவரை உடனடியாக சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தினா். எனினும் முதலில் சாப்பிட மறுத்த முருகன், மருத்துவா்களின் அறிவுரையை ஏற்று வியாழக்கிழமை காலை இளநீா் பருகி தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டாா். பின்னா் அவருக்கு பழங்கள் வழங்கப்பட்டன. முருகன் மீண்டும் சாப்பிட தொடங்கியதால் உடல்நிலை வேகமாகச் சீராகிவிடும். வெள்ளிக்கிழமை அவா் வேலூா் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.