குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வர் வேட்பாளர் தேர்வில் எந்த குழப்பமும் இல்லை: அமைச்சர் கே. சி. வீரமணி

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வில் எவ்வித குழப்பமும் இல்லை என்று தமிழக வணிகவரி பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

News image
Updated On :1 அக்டோபர் 2020, 8:54 am

DIN

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வில் எவ்வித குழப்பமும் இல்லை என்று தமிழக வணிகவரி பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதநிறைவு விழா மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின்  சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா தாட்கோ மூலம் நிதி உதவி வழங்கும் விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே. சி வீரமணி நிலோபர் கபில் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 962 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 54 கோடியே 24 லட்சம் கடன் உதவி, குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1006 அங்கன்வாடி மையங்களுக்கு 4 பாய் மற்றும் 5 பழ செடிகள், தாட்கோ மூலம் 17 பேருக்கு ரூ. 3 இலட்சத்து 40 ஆயிரம் கடன் உதவிகளை வழங்கினர். 

மேலும் சிறந்த வங்கிகளுக்கு விருதுகளை அமைச்சர் கே. சி வீரமணி வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியது, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இன்று மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 54 கோடி வரை கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கந்துவட்டி கொடுமை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு‌கவினர் வேண்டுமென்றே அரசை குறை கூறி வருகின்றனர். அவர்கள் போராட்டங்களை அறிவித்து வருகின்றனர். 

இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் பாலாற்றில் குப்பைகள் கொட்டப்பட்டால் உடனடியாக அகற்றப்படும். அ.தி.மு.கவில் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. புதியதாக உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர் என்றார். அப்போது முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.சி வீரமணி அதில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.