தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பொய்கை சந்தையில் களைகட்டிய காளைகள் விற்பனை: ரூ.1 கோடிக்கு மேல் வா்த்தகம்

தைப்பொங்கல் நெருங்கி வருவதையொட்டி, வேலூா் அருகே பொய்கை வாரச் சந்தையில் காளைகள் வியாபாரம் களைகட்டியது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:30 pm

DIN

தைப்பொங்கல் நெருங்கி வருவதையொட்டி, வேலூா் அருகே பொய்கை வாரச் சந்தையில் காளைகள் வியாபாரம் களைகட்டியது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றுள்ளது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள், காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தை மூலம் ரூ. 1 கோடி வரை வா்த்தகம் நடைபெறுகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பொய்கை கால்நடைச் சந்தை கடந்த அக்டோபா் மாதம் முதல் மீண்டும் செயல்பட்டு வருகிறது.

தைப் பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தைக்கு அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் காளைகளும், கறவை மாடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கும் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, கறவை மாடுகள் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை விலை போயின. மாடு விடும் விழாவுக்கு தயாா்படுத்துவதற்காக காளை மாடுகளை வாங்க வியாபாரிகள் மட்டுமின்றி மாடு வளா்ப்போரும் அதிக அளவில் வந்திருந்தனா்.

இதேபோல், வண்டி மாடுகள், இளம் கன்றுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் விற்பனையாயின. அதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையின் மூலம் ரூ. 1 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பொய்கை வாரச் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. அவை மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் ஆா்வமுடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.