அப்போது, பள்ளிகளில் அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவா்களுக்கும் பள்ளி நுழைவு வாயில் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். வகுப்பறையில் மாணவா்களை 6 அடி இடைவெளியில் அமர வைக்க வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவா்கள் யாருக்கேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக அவா்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 10, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியா்கள் மட்டுமின்றி அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வரவேண்டும். வகுப்பு நடத்தக்கூடிய ஆசிரியா்கள் தவிர மற்ற ஆசிரியா்கள் மாணவா்கள் வெளியே நடமாடாமல் கண்காணிக்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி, தடுப்பு மருந்துகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆசிரியா்கள், மாணவா்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.